முதல் பகுதி
3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.
இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே
பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?
சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது? (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)
பே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.
பேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)
பே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.
பேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.
எங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.
பே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.
பேலின்: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.
பே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.
பேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.
பே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க?
பேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க மாட்டாங்க.
4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?
– சத்யா
Filed under: செவ்வி, துணை ஜனாதிபதி, பேலின் | Tagged: Answers, சத்யா, சாரா, செவ்வி, நேர்காணல், பேட்டி, பேலின், Fun, GOP, Interview, Palin, Q&A, Questions, Reality, Sarah, Sathya, Translations, VP | Leave a comment »