பாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா?

India reels over Obama’s silence

Asia Times Online :: South Asia news, business and economy from India and Pakistan: By: M.K. Bhadrakumar

India’s leaders are miffed that United States president-elect Barack Obama didn’t give them a telephone call, as he did numerous heads of state around the world — including Pakistan’s.

    அலசலில் இருந்து சில முக்கியபுள்ளி:

    • ருசியாவைப் போல் மன்மோகனும் நடந்து கொள்ளலாம். ஜெயித்தவுடன் Dmitry Medvedevஐ ஒபாமா அழைக்கவேயில்லை. பொறுத்திருந்து பார்த்த டிமிட்ரி தானே தொலைபேசியை சுழற்றி ஒபாமாவை அழைத்து வாழ்த்து சொல்லி, செய்தியையும் ஊடகங்களில் பரப்பிவிட்டார். புலம்பி சோம்பவில்லை.
    • காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனை, ஒபாமா நியமிக்கக் கூடும்.
    • பில் க்ளிண்டனைப் போலவே காஷ்மீரத்துக்கு தனி தூதுவரையோ ஆலோசகரையோ ஒபாமா வைத்துக் கொள்வதன் மூலம் ‘காஷ்மீர் சுதந்திர நாடு‘ என்னும் கொள்கைக்கு வலிமை சேர்ப்பார்.
    • சீனாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த, ‘இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்‘ என்று இந்தியா பகல் கனவு காண்கிறது.
    • அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டுள்ள இந்த நேரத்தில், சீனாவின் நிதியை ஒபாமா பெரிதும் நம்பியுள்ளார்.
    • பெர்சிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வரை இந்தியாவை இராணுவ உதவிக்கு உறுதுணையாக நம்பியிருந்த ஜார்ஜ் புஷ் பதவிக்காலம் முடிந்துபோய்விட்டது.
    • அதே போல், முந்தைய குடியரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானுக்குள் இந்தியா நுழையவும் அடிகோல்வதற்கான முயற்சிகளை வைத்திருந்தது.
    • இந்த மாதிரி காரணங்களினால் சீன எண்ணெய்க்குழாய் பாதிக்கப்படலாம் என்பதால் —

      • அருணாச்சல் பிரதேசத்திற்குள் சீனா அத்துமீறல்களை வைத்தது
      • இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்கள் முரண்டியது
    • அமெரிக்கா உடன் இந்தியா கையெழுத்திட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடு எழும். அமெரிக்காவில் கையெழுத்திட்ட புஷ் இனிமேல் இல்லை. இந்தியாவில் ஒப்புக்கொண்ட மன்மோகன்/காங்கிரஸ் பதவி இழக்கலாம். அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தை (CTBT) இந்தியா பின்பற்ற ஒபாமா விரும்புகிறார்.

    தனக்குரிய மரியாதையை அமெரிக்கா தந்து தன்னை உயர் ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. பாகிஸ்தானும் ஒன்றுதான்; இந்தியாவிற்கும் அதே தட்டுதான் என்று சமன்படுத்தப் பார்க்கிறார் பராக் ஒபாமா.

    இது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வளரவும், இந்தியாவிற்கு கோபமும் வரவைக்கும்.


    தொடர்புள்ள செய்திகள்:

    Obama tried to speak to me: PM: “இந்தியாவை ஒபாமா ஒதுக்கவில்லை – பிரதமர்”

    அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தன்னுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், தனது வெளிநாட்டுப் பயணம் காரணமாக பேச முடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

    கத்தாரிலிருந்து நேற்றிரவு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர், இந்தியாவை ஒபாமா ஒதுக்குகிறார், அதனால் தான் என்னுடன் இன்னும் பேசவில்லை என்பதெல்லாம் புரளிகள். கடந்த 8ம் தேதியே அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

    ஆனால், அந்தத் தொடர்பை மேற்கொள்ள (to establish contact) மிகச் சிறிய கால அவகாசமே இருந்தது. அதற்குள் எனது திட்டப்படி நான் ஓமன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக பயணத்திலேயே இருக்கிறேன். இதனால் தான் பேச முடியவில்லை.

    முன்னதாக காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் தான் இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஒழியும் என ஒபாமா கூறியுள்ள கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இது இரு நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


    என்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்

    அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உட்பட 15 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.